ராமநாதபுரத்தில் 34 வது தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

34 வது தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி தொடர் மார்ச் இரண்டாம் தேதி ராமநாதபுரத்தில் துவங்குகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்க தலைவர் ஜாவி காட்லா, தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் நடத்தும் 34 வது தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி தொடர் மார்ச் 2 ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை ராமநாதபுரத்தில் நடைபெறும் என தெரிவித்தார். இந்த தொடரில் தமிழ்நாடு, ஜம்முகாஷ்மீர், கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொள்ள உள்ளதாக குறிப்பிட்டார். லீக் கம் நாக் அவுட் முறையில்  இந்த தொடர் நடைபெற உள்ளது. 

Night
Day