லக்னோ அணியில் இருந்து கே.எல். ராகுல் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லக்னோ அணியில் இருந்து கே.எல்.ராகுல் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் லீக் தொடருக்காக வரும் வாரத்தில் மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், அணியில் தக்க வைக்கப்படவுள்ள வீரர்களின் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுலை அணியில் இருந்து நீக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சீசனில் லக்னோ அணி தோல்வியடைந்ததற்கு, கே.எல்.ராகுல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாததே காரணமாக கருதப்படுவதால், அவரை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Night
Day