விளையாட்டு
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக குஜராத் வீரர் இஷாந்த் ஷர்மாவுக்கு 25 % அபராதம்...
ஐபிஎல் 2025 நடத்தை விதிகளை மீறியதாக குஜராத் அணி வீரர் இஷாந்த் ஷர்மாவுக்கு ...
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் ரிஸ்வான் விக்கெட்டை வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்ததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்ட நாயகன் விருது பெற்றார். அப்போது பேசிய பும்ரா, இந்த போட்டியில் இந்திய அணி எடுத்த ஸ்கோர் தங்களுக்கு திருப்திகரமாக இருக்கவில்லை என்று கூறினார். இன்னும் அதிகமாக ரன்களை குவித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பும்ரா, இருப்பினும் இதுபோன்ற ஆடுகளங்களில் சேசிங் செய்வது கடினம் என்பதால் நம்பிக்கையுடன் பந்துவீச களமிறங்கியதாக தெரிவித்தார்.
ஐபிஎல் 2025 நடத்தை விதிகளை மீறியதாக குஜராத் அணி வீரர் இஷாந்த் ஷர்மாவுக்கு ...
பிரம்மாண்ட திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளிய?...