2025ம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக ரோகித் ஷர்மா விளையாட வேண்டும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரோகித் ஷர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், எதிர்காலத்தில் ரோஹித் சர்மா சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடியுள்ள ரோகித் ஷர்மா, அதேபோல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி பல வெற்றிகளை குவிக்க வேண்டும் எனவும் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார். மேலும் சிஎஸ்கே அணியின் கேப்டனான மகேந்திர தோனி, நடப்பு ஐபிஎல் தொடரில் தனது ஓய்வை அறிவித்தால், சென்னை அணியின் கேப்டன் பதவியும் ரோஹித் ஷர்மாவை நோக்கி இருக்கும் எனவும் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார். 

Night
Day