2025 ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடினால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிஎஸ்கே அணிக்காக 2025 ஐபிஎல் தொடரிலும், தோனி தொடர்ந்து விளையாடினால் ஆச்சரியப்படப் போவதில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரோடு தோனி ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுகுறித்து, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அனில் கும்ப்ளே அளித்த பேட்டியில், 2008இல் தாம் ஓய்வு பெற்ற போது தோனி தான், முதல் ஆளாக தன்னை தோளில் தூக்கி மைதானத்தை வலம் வந்ததாகக் கூறினார். மேலும், நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் ஆர்வத்தைக் கொண்டுள்ள தோனி, சிஎஸ்கே அணிக்காக மேலும் சில வருடங்கள் விளையாடினால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றும் கும்ப்ளே கூறியுள்ளார். 

Night
Day