5-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5வது 20வது ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 4க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஹராரேவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 58 ரன்கள் எடுத்தார். 168 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Night
Day