சென்னை: கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் 17 ஆண்டுகள் கழித்து பெருமாள் மகாலட்சுமி தாயார் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஹோமங்கள் வளர்த்து பெருமாளுக்கு காப்பு கட்டி திருமாங்கல்ய சரடு மகாலட்சுமி தாயாருக்கு அணிவிக்கப்பட்டது. பின்னர் வைதீக முறைப்படி தேங்காய் உருட்டி நலங்கு வைத்து அக்னி பொரியிட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day