அயோத்தியின் மகிழ்ச்சி அபுதாபியிலும் பரவியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அயோத்தியின் மகிழ்ச்சி அபுதாபியிலும் பரவியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள் முதல் இந்துக் கோவிலை திறந்து வைத்து உரையாற்றிய அவர், அயோத்தியில் பல நூற்றாண்டு கால நனவாகியுள்ளதாகவும் இந்தியா அதனை போற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். இங்கும் அயோத்தியின் மகிழ்ச்சி பரவியுள்ளதை கண்டு மகிழ்வதாகவும் அயோத்தி மற்றும் அபுதாபி கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றது தனக்கு கிடைத்த மரியாதை எனக் கூறினார். இந்த கோவிலை நிறுவ உதவிய தனது செயல் மூலம் அதிபர் முகமது அல் நஹ்யான் 140 கோடி இந்தியர்களின் நெஞ்சங்களை கவர்ந்துள்ளதாகவும் அமீரகம் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உன்னத உறவை வெளிக்காட்டும் தருணமாகவும் இது அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Night
Day