காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரியங்கா காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து வயநாடு மக்களவை தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள பிரியங்கா காந்தி வாழ்த்து பெற்றார். வயநாடு மக்களவை இடைத்தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார். இதையொட்டி, வரும் 23ம் தேதி நண்பகல் 12 மணிக்கு வயநாடு ஆட்சியரகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன்னதாக டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Night
Day