கேரளா: வேன் மீது லாரி மோதி விபத்து - 2 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் வேனில் சென்ற இன்னிசை குழுவினர் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆலப்புழாவை சேர்ந்த இன்னிசை குழுவினர் நிகழ்ச்சிக்காக பத்தனம்திட்டாவிற்கு சென்றுவிட்டு மினிவேனில் ஊர் திரும்பினர். அப்போது தமிழகத்தில் இருந்து காய்கறி ஏற்றி சென்ற லாரி, மினிவேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரி ஓட்டுநர் அஜித், வேனில் பயணித்த அகில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற கோழிஞ்சேரி போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Night
Day