சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகளால் போக்குவரத்து மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் மெட்ரோ பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மந்தைவெளி, ராயப்பேட்டை சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அண்ணாசாலை உள்ளிட்ட சாலைகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்று பாதையில் வாகனங்கள் செல்ல வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகள் முறையாக இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சாலைகள் மாற்றப்பட்ட இடங்களில் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டுமெனெ பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day