6-வது கட்டத் தேர்தல்-58 தொகுதிகளில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

6 வது கட்ட மக்‍களவை தேர்தலுக்‍கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. நாளை மறுநாள் 58 தொகுதிகளில் வாக்‍குப்பதிவு நடைபெற உள்ளது. 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் இதுவரை 428 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து 6வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், பீகார், மேற்கு வங்கத்தில் தலா 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் 1 தொகுதி என மொத்தம் 58 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வதால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 
6வது கட்ட மக்‍களவை தேர்தலில் மத்திய அமைச்சர்​ தர்மேந்திர பிரதான், ​பன்சூரி ஸ்வராஜ், கண்ணையாகுமார், மேனகா காந்தி, மெகபூபா முஃப்தி, மனோகர் லால் கட்டார், நவீன் ஜிண்டால், ராஜ்பப்பர், தீபேந்தர் சிங் ​​ஹுடா, ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்கள் ஆவர். 

கடைசி கட்டமாக 57 தொகுதிகளுக்கு வருகிற ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதே நாளில் முடிவுகள் அறிவிக்‍கப்பட உள்ளன. 

Night
Day