சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கு - செந்தில் பாலாஜி தாக்கல் செயத மனு தள்ளுபடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்ட விரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரி  செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எம்.பி. , எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க வேண்டுமென மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அல்லி, வழக்கின் மீதான விசாரணை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 16 ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்ட நிலையில்  46 வதுமுறையாக அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Night
Day