திருச்சி: சொத்து பிரச்னையால் வீட்டை அடித்து நொறுக்கிய 10 பேர் கொண்ட கும்பல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சொத்து பிரச்சனை காரணமாக 10 பேர் கொண்ட கும்பல் வீட்டை அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லால்குடி அருகே மாந்துறை நகர் ரோட்டில் வசித்து வருபவர் பிச்சை மொய்தீன் மனைவி மும்தாஜ் பேகம். இவர்களுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மும்தாஜ் பேகம் சகோதாரர் அப்துல் முஸ்லிஃப்பின் இரண்டாவது மனைவியின் மகன்கள் யூசுப், ஹெஃப் உள்ளிட்ட அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல் மும்தாஜ் பேகம் வீட்டிற்குள் புகுந்து வீட்டை அடித்து நொறுக்கியதுடன் மும்தாஜ் பேகத்தையும் அடித்து உள்ளனர். இதுகுறித்து மும்தாஜ் லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் வீட்டையும் இடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Night
Day