மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் பாலியல் துன்புறுத்தல் - டிப்பர் லாரி ஓட்டுநர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த டிப்பர் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கோவில்பட்டி அருகே கயத்தாறை சேர்ந்த 20 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் வீட்டில் தனிமையில் இருந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் மாரிமுத்து என்பவர் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

varient
Night
Day