வாகன சோதனை : சிக்கிய மெத்தப்பட்டமைன் போதைப் பொருள் - 3 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மெத்தப்பட்டமைன் போதைப்பொருளை கைப்பற்றிய போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். ஏ புதுப்பட்டி புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட காரை சோதனையிட்டனர். காரில் இருந்த 3 பேரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சோதனை நடத்தியதில், சர்வதேச சந்தையில் கிடைக்கும் மெத்தப்பட்டமைன் என்ற போதை பொருள் 30 பாக்கெட்டுகள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்த 3 பேரை கைது செய்த போலீசார், போதைப் பொருட்களையும் வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day