ஹேமந்த் சோரன் விடுதலை நீதிக்கு கிடைத்த வெற்றி - இந்திய கம்யூ. டி.ராஜா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் கிடைத்தது வரவேற்க்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். 

ராஞ்சியில் உள்ள பட்காய் என்ற பகுதியில் உள்ள 266 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை, ஹேமந்த் சோரனை கைது செய்தது. இதனை தொடர்ந்து அவர் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜா, நீதி வெல்லும், உண்மை வெல்லும் என்றும் அவரது விடுதலை இந்திய கூட்டணியை மேலும் பலப்படுத்தும் என்றும் கூறினார்.

Night
Day