ஈரோடு: வனத்துறையை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் விவசாயிகளுக்கு ஆதரவாக வனத்துறையினரை கண்டித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாளவாடி மலைப்பகுதியில் காட்டுயானைகள் தாக்கி விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்கு வனத்துறையினரின் அலட்சியமே காரணம் என விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் நுழைவதை தடுக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக வணிகர் சங்கத்தினர் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Night
Day