ராணிப்பேட்டை: பல்பொருள் அங்காடியில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பல்பொருள் அங்காடியில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரக்கோணம் காந்திசாலை அருகே முருகன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு வழக்கம்போல் கடையை சாத்திவிட்டு சென்ற சிறிது நேரத்தில் கடையில் இருந்து புகை வந்துள்ளது. தகவல் அறிந்து சென்ற அரக்கோணம் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.  தொடர்ந்து இச்சம்பவம் குறித்து அரக்கோணம் நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Night
Day