கிருஷ்ணகிரி: பொங்கல் மற்றும் ஊர் பண்டிகையை முன்னிட்டு எருதுவிடும் விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளபள்ளி அருகே பொங்கல் மற்றும் ஊர் பண்டிகையை முன்னிட்டு மாபெரும் எருது விடும் விழா நடைபெற்றது. துரிஞ்சிப்பட்டியில் நடைபெற்ற இவ்விழாவில் கும்மனூர், சோக்காடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 250 எருதுகள் பங்கேற்றன. வாடிவாசல் வழியாக ஒவ்வொரு எருதாக அவிழ்த்து விடப்பட்டு எருது விடும் விழா நடைபெற்றது. இதில், 100 மீட்டர் தூரத்தை மிக குறைவான நேரத்தில் விரைவாக கடந்த எருதுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

Night
Day