தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் உயர்த்தப்படவிருந்த கட்டண உயர்வு நிறுத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்‍களவை தேர்தல் விரைவில் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் 20-க்‍கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ், தமிழகத்தில் 63 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணத்தை மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு ஏப்ரல் 1-ம் தேதியான இன்று முதல் 20க்‍கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட இருந்தது. ஆனால் மக்‍களவை தேர்தல் காரணமாக சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை அமல்படுத்த வேண்டாம் என மத்திய அரசு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் முடிந்த பிறகு வருகிற ஜூன் மாதம் சுங்கக்கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்‍கப்படுகிறது.

Night
Day