தலைக்கவசம் அணியாத காவல்துறையினர் மீது நடவடிக்கை : சென்னை போக்குவரத்து மண்டல துணை ஆணையர் சுற்றறிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் இனி தலைக்கவசம் அணியாத காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் போலீசார் இந்த விதிகளை பின்பற்றுவதில்லை என குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில், சென்னை போக்குவரத்து மண்டல துணை ஆணையர், உதவி ஆணையர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காரில் செல்லும்போது சீட்டு பெல்ட் அணியமல் இருந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day