தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு நிலையான கட்டணம் : மத்திய அரசுக்கு உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான நிலையான கட்டணத்தை அமல்படுத்த வேண்டும், இல்லையென்றால் நாங்கள் அமல்படுத்துவோம் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கான மத்திய அரசு விதிமுறைகள் கீழ் நோயாளிகளிடமிருந்து வசூலிக்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய, மாநில சுகாதாரத் துறை செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி சிகிச்சைகளுக்கான நிலையான கட்டணம் வெளியிடுவதை உறுதி செய்ய ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தவறினால், நிலையான கட்டணங்களை அமல்படுத்தவது பற்றி உச்சநீதிமன்றமே பரிசீலிக்கும் எனவும் தெரிவித்தனர். 

Night
Day