புதுக்‍கோட்டை: இருசக்‍கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை அருகே இருசக்‍கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தின் பதைபதைக்கு கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது.  முக்கூட்டுகொள்ளை என்ற கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் தனது இருசக்‍கர வாகனத்தில் திருவரங்குளம் பகுதிக்‍கு சென்று கொண்டிருந்தபோது, புதுக்கோட்டை நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் மாணிக்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தை ஓட்டுநர் நிறுத்தாமல் சென்றதால், ஆத்திரமடைந்த பொதுமக்‍கள், தோப்பு கொள்ளை பகுதியில் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பான கண்காணிப்பு பதிவு காட்சி வெளியாகியுள்ளது. 

Night
Day