மயிலாடுதுறை: கடற்கரை ஓரம் ஒதுங்கிய 15 அடி உயரமுள்ள மர்ம பொருள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சீர்காழி அருகே கடற்கரை ஓரம் ஒதுங்கிய 15 அடி உயரமுள்ள மர்ம பொருளைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சீர்காழி அருகே கீழமூவர்க்கரை மீனவர் கிராமத்தில் கடற்கரையில் சுமார் 15 அடி உயரமுள்ள சிவப்பு நிறத்திலான மர்ம பொருள் கரை ஒதுங்கி உள்ளது. இதனைக் கண்ட கிராம மக்கள் உடனடியாக பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் கரை ஒதுங்கிய மர்ம பொருள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதன் பெயர் போயம் என்றும், அது கடலில் தடை செய்யப்பட்ட பகுதியை அடையாளம் காண மிதக்க விடும் கருவி எனவும் தெரிய வந்தது. இந்தப் பொருள் எங்கிருந்து அடித்து வரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day