வேங்கைவயல் விவகாரம் : உண்மை கண்டறியும் சோதனை மனு தள்ளுபடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்க கோரிய சிபிசிஐடி போலீசாரின் மனுவை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வேங்கை வயல் கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டறிய சிபிசிஐடி போலீசார் 394 வது நாளாக விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான சாட்சியங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சிபிசிஐடி போலீசார் இருப்பதால் இறையூர் வேங்கை வயல், 
ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதி கிராமங்களை சேர்ந்த 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Night
Day