சூர்யாகுமார் கேட்ச் பிடிக்கும் முன் கேப்டன் ரோகித் ஷர்மா கொடுத்த ரியாக்‌ஷன் வைரல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா வெளிப்படுத்திய ரியாக்‌ஷன் வீடியோ வைரலாகி வருகிறது. டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றிபெற தென்னாப்பிரிக்க அணிக்கு 6 பந்துகளுக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசய பந்தை டேவிட் மில்லர் சிக்சருக்கு ஓங்கி அடித்தார். அந்த பந்தை எல்லைக் கோடு அருகே நின்றிருந்த சூர்யா குமார் யாதவ் அபாரமாக கேட்ச் பிடித்து மில்லரை ஆட்டமிழக்க செய்தார். அந்த நொடிக்கு முன்னதாக ரசிகர்களும் சக அணி வீரர்களும் நம்பிக்கையை இழந்தனர். குறிப்பாக பந்து லைனை நோக்கி பறக்கும் போது கேப்டன் ரோகித் ஷர்மா நம்பிக்கை இழந்தார் போல் தனது முட்டியில் கை வைத்து குனிந்த காட்சி வைரலாகி வருகிறது. 

Night
Day