சிவகங்கை: காரிகால சோழீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற மாசி மக பெருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கரிகால சோழீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு சுவாமி அம்மன் கேடயத்தில் பவனி நடைபெற்றது. கோவில் வாகன மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ விநாயகப் பெருமான், ஸ்ரீ கரிகால சோழீஸ்வரர் சுவாமி பிரியாவிடை அம்மன் மற்றும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சர்வ அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளினர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த அம்மனுக்கு ஏராளமானோர் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

Night
Day