சீர்காழி சியாமளாதேவி அம்மன் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற பங்குனி உற்சவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சியாமளாதேவி அம்மன் கோயிலில் பங்குனி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக பால் குடம், அலகு காவடி எடுத்து திரளான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை சென்றடைந்து நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு மஞ்சள், திரவிய பொடி உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day