திருவண்ணாமலை: ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர கொடியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலையில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 31 அடி உயரம் உள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமிக்கு பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day