புதுக்‍கோட்டை: சாந்தநாத சுவாமி கோயிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்‍கு சிறப்பு பூஜை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதோஷத்தை முன்னிட்டு, புதுக்கோட்டையில் அமைந்துள்ள சாந்தநாத சுவாமி கோவிலில் நந்தீஸ்வரருக்‍கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சாந்தநாத சுவாமிக்‍கும் வேதநாயகி அம்பாளுக்‍கும் அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. இதனையடுத்து சுவாமி வெள்ளி அலங்காரத்திலும், அம்பாள் சந்தனகாப்பு அலங்காரத்திலும் காட்சியளித்ததை திரளான பக்‍தர்கள் கண்டு மனமுருக வழிபட்டனர். 

Night
Day