ராமநாதபுரம்: ஸ்ரீ காரையா அய்யனார் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் தாளையடி கோட்டை கிராமத்தில் ஸ்ரீ காரையா அய்யனார் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து புனித நீர் அடங்கிய குடங்கள் புதிதாக கட்டப்பட்ட நுழைவாயில் மற்றும் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு காரையா அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

Night
Day