ரூ.10,500 கட்டணம் செலுத்தி ஏழுமலையானை தரிசித்த ஜே.பி.நட்டா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், திருப்பதியில் 10 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் செலுத்தி பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா ஏழுமலையானை வழிபட்டார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காரணத்தால் புரோட்டகால் தகுதி வாய்ந்த மிக முக்கிய பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு மட்டுமே தற்போது திருப்பதி திருமலையில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. எனவே அரசு பொறுப்பு எதிலும் இல்லாததால் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, தனக்‍கும், தன்னுடன் வந்த 25 பேருக்‍கும் தலா 10 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி டிக்கெட் வாங்கி ஏழுமலையானை வழிபட்டார். பின்னர் அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி, வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர்.

Night
Day