அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு ஜாமீன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. 

கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடமிருந்து 40 சதவீதம் கமிஷன் பெறப்பட்டதாக ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, பாஜக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில், காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக பெங்களூரு 42வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜரானார். அவருக்கு முன்ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பெங்களூரு வந்த ராகுல்காந்தியை விமான நிலையத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வரவேற்றார். 

Night
Day