ஆந்திரா : முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாகனம் மீது காலணி வீச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெகன்மோகன் ரெட்டியின் வாகனம் மீது காலனி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திரா நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், அனந்தபூர் அருகே பேருந்து நிலையத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஏராளமான கட்சி தொண்டர்களும், பெண்களும் கூடியிருந்த நிலையில், கூட்டத்தில் இருந்து மர்ம்நபர் ஒருவர் பிரச்சார வாகனம் மீது காலனியை தூக்கி விசியுள்ளார். இதனைக் கண்டு, தொண்டர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day