தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலி!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள கத்துவா மாவட்டம் மச்சேதி பகுதியில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். மலைப் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் இறந்தனர். சம்பவ இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தப்பியோடிய தீவிரவாதிகளை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், படுகாயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாக தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Night
Day