பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல வேண்டும் - ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டு ஆறுதல் கூற வேண்டும் என்று காங்கிரஸ் எம்பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி மணிப்பூரில் குக்கி - மெய்தி சமூக மக்களுக்கிடையே வெடித்த கலவரத்தில் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை நேற்று ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பாக தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நிலைமையை முன்னேற்றமடைய செய்யவும், அமைதியை நிலைநாட்டவும் எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உதவ இந்தியா கூட்டணி தயாராக இருப்பதாக பதிவிட்டுள்ளார். 

Night
Day