ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெண்ணை கடத்திய வழக்கில் ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் 4ஆம் தேதி எச்.டி ரேவண்ணா ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யபப்ட்ட நிலையில், ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில், இந்த மனு எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, ஆள் கடத்தல் வழக்கில் எச்.டி ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். எச்.டி ரேவண்ணாவுக்கு எதிரான பெங்களூரு கே.ஆர் நகர் காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Night
Day