33 இந்தியத் தொழிலாளர்களை மீட்ட இத்தாலி போலீஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இத்தாலியின் வடக்கு வெரோனா மாகாணத்தில் பண்ணைகளில் கொத்தடிமைகளாக இருந்து 33 இந்திய விவசாயத் தொழிலாளர்களை போலீசார் மீட்டுள்ளனர்.

கடந்த மாதம் பழம் பறிக்கும் ஒரு இந்தியத் தொழிலாளியின் கை இயந்திரத்தில் சிக்கி துண்டிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து கொத்தடிமை விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து களத்தில் இறங்கிய போலீசார் இதுவரை 33 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர். மேலும் அவர்களை கொத்தடிமைகளாக நடத்திய இரு பண்ணை உரிமையாளர்களிடம் இருந்து இந்திய மதிப்பில் 45 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இத்தாலி போலீசார் தெரிவித்துள்ளனர். 

Night
Day