மதுரை: ஆந்திராவில் இருந்து மினிசரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் இருந்து மதுரைக்கு மினி சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த ராணுவ வீரர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் தொட்டப்பநாயக்கனூர் கருப்பசாமி கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த மினி சரக்கு வேனை சோதனை செய்ததில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ராணுவ வீரர்கள் செல்வேந்திரன், பாண்டியன் உட்பட 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா, உசிலம்பட்டியில் வைத்து பிரித்து விற்க முயன்றது தெரியவந்தது.

Night
Day