அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது எனது தவறு - ராமதாஸ்

எழுத்தின் அளவு: அ+ அ-

அன்புமணியை மத்திய அமைச்சராக்கியதும், கட்சி பொறுப்புகளையும் கொடுத்தும் தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாகமவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் சூழலில் விழுப்புரம் தைலாப்புரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அரசியலில் சில தவறுகளை செய்துவிட்டதாக கூறினார். அதில் முதல் தவறு அன்புமணியை மத்திய அமைச்சராக்கியதும், இரண்டாவது தவறு அன்புமணிக்கு கட்சி பொறுப்பு கொடுத்தது எனவும் தெரிவித்தார். நடக்கும் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறிய அவர், எம்எல்ஏக்களில் 2 பேர் தன்னோடு இருப்பதாகவும், 3 பேர் அன்புமணியிடம் தெரியாமல் போய் விட்டதாகவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், அன்புமணியின் செயல்பாடுகள் சரியாக இல்லை எனவும், அருவருக்கத்தக்க வகையில் அவரது செயல்பாடு உள்ளதாகவும் கூறினார். பாமகவில் பிளவு இருக்கிறது என மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு அன்புமணி செயல்படுவதாகவும் அவர் ஆதங்கத்துடன் கூறினார். 

Night
Day