அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் தெரு நாய்கள் சண்டை - மக்கள் பீதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அவனியாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் தெரு நாய்கள் கொடூரமாக சண்டையிட்டு கொண்டதால் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்தனர். தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் பிரச்னை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அவனியாபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும், ஏராளாமான தாய்மார்கள் குழந்தைகளுடன் வருகை தருகின்றனர். சுகாதார நிலையத்தை சுற்றி பத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இந்நிலையில், சுகாதார நிலையத்தின் வாயிலில் 2 தெருநாய்கள் ஒன்றுடன் ஒன்று கொடூரமாக சண்டையிட்டுக்கொண்டது. இதனால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கடும் அச்சமடைந்தனர். மாநகராட்சி நிர்வாகம் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 

varient
Night
Day