கிருஷ்ணகிரி: வெயில் அதிகரித்து வரும் நிலையில் திடீரென பெய்த கனமழை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திடீரென பெய்த மழையால், வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல்நிலவியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் பனிமூட்டம் நிலவிய நிலையில், கடந்த நான்கு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மற்றும் புறநகர் பகுதிகளான பெத்த தாளப்பள்ளி, தின்னகழனி, கங்கலேரி, மூங்கில் புதூர் போன்ற இடங்களில் திடீரென அரை மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். 

Night
Day