சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 15 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சீனாவில் வானுயர் அடுக்குமாடி கட்டத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பேர் பலியானார்கள். நான்ஜிங் நகரில் உள்ள பன்னடுக்கு அடுக்கு மாடி குடியிருப்பில் முதல் தளத்தில் பற்றிய தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் விரைந்தது.  மின்சார இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தீப்பற்றியதாக கூறப்படும் நிலையில் 15 பேர் தீயில் கருகி பரிதாபமாக பலியானார்கள். 44 பேர் பலத்த தீக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சீனாவில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Night
Day