தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 3 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது. அதிகபட்சமாக பனங்காளி மஞ்சள் குவிண்டால் 33 ஆயிரத்தை கடந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆத்தூர் புதுப்பேட்டை தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 803 விவசாயிகள் 3 ஆயிரத்து 865 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் பனங்காலி மஞ்சள் குவிண்டால் 33 ஆயிரத்து 869 ரூபாய்க்கு விலை போனது. மொத்தமாக 3 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...