திருவள்ளூர் அம்மையார் குப்பத்தில் அஇஅதிமுகவின் 54ஆம் ஆண்டு துவக்கவிழா கொண்டாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் ஆணைக்கிணங்க, அஇஅதிமுகவின் 54 ஆம் ஆண்டு துவக்க விழா, திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பம் பகுதியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார் குப்பம் பகுதியில் அஇஅதிமுகவின் 54 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.பி.சந்திரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் முன்னாள் அரசு தலைமை கொறடா  பி.எம்.நரசிம்மன் மற்றும் முன்னாள் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, பொது மக்களுக்கு இனிப்புகளும், பெண்களுக்கு இலவச சேலைகளும் வழங்கப்பட்டன. பின்னர் விழாவில் பங்கேற்ற மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் எல்.ரஜினி, முன்னாள் அரசு வழக்கறிஞர் இ.எம்.எஸ் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

varient
Night
Day