தூத்துக்குடி: மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் ஆத்திக்காடு கிராமத்தில் மகளிர் உரிமை தொகை வழங்க வலியுறுத்தி 40-க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கண்களில் கருப்பு துணி கட்டி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 17 பெண்களுக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்கப்பட்டதாகவும், தகுதி வாய்ந்த 34 பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஏற்கனவே, முதலூர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியும், சாத்தான் குளம் மற்றும் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினர். மேலும், மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை எனில் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Night
Day