பரந்தூர் புதிய விமான நிலைய நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடும் எதிர்ப்புக்கு இடையே பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு சிறுவள்ளூர் கிராமத்தில் நில எடுப்புக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக பரந்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சிறுவள்ளூர் கிராமத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 412 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும், ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Night
Day