பள்ளி நேரத்தில் கனரக வாகனங்களை இயக்க தடைகோரி வழக்கு தள்ளுபடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டத்தில், பள்ளி நேரத்தில் கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களுக்கு தடைகோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. தென்காசியை சேர்ந்த ஜமீன் என்பவர், உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தென்காசி புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் பள்ளி நேரத்தில் குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் இயக்கப்படுவதாவும், காலை மற்றும் மாலையில் வாகனங்களை இயக்க தடை விதிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் - விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, போதிய ஆவணங்களும் அடிப்படை ஆதாரங்களும் இல்லை எனக்கூறி, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Night
Day