எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது மைதானத்திலேயே அக்சர் படேலின் காலில் விழுந்த விராட் கோலியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை மட்டுமே எடுத்தது. மறுப்பக்கம் எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் தனது விக்கெட்டை கொடுக்காமல், நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார். இந்த நிலையில், போட்டியின் இக்கட்டான சூழலில், இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் கேன் வில்லியம்சன் விக்கெட்டை எடுத்தார். உடனே இந்திய வீரர்கள் அக்சர் படேலை வாழ்த்த அவரை நோக்கி ஓடி வந்தனர். அப்போது, அக்சர் படேலிடம் ஓடி வந்த விராட் கோலி அவரது காலை தொட்டு வணங்க முற்பட்டார். உடனே சுதாரித்து கொண்ட அக்சர் படேல் சட்டென கீழே உட்கார்ந்து கொண்டு விராட் கோலி கைகளை பற்றிக் கொண்டார்.